My Message

அறம் செய்ய விரும்பு!

Note: Would be starting to share my works again soon!

Pages

Showing posts with label kavidha kavidha. Show all posts
Showing posts with label kavidha kavidha. Show all posts

Saturday, March 19, 2011

எட்டாத பட்டாம்பூச்சி....~~ Ettadha Pattamboochi




கண்முன் பறக்கும் வானவில் நீயோ??

காற்றில் மிதக்கும் சித்திரம் நீயோ??

பிரம்மன் போட்ட மார்கழி கோலமா??

வானம் செல்லும் சின்ன மின்னலா??

நொடியில் சுருங்கிய நீல வானமா??

படியில் சிதறும் நவரத்ன மாலையா??

அறியா காட்டின் புரியா வழியாய்..

விட்டதும் துள்ளிடும் அழகிய முயலாய்..

மனதின் ஓட்டமாய்.. மனிதனின் ஆட்டமாய்.

நிமிடத்தில் பிரியும் நிலையில்லா உயிராய்..

தொடும் முன் தொடுவானமே சென்றது..

எட்டாத பட்டாம்பூச்சி..

************கார்த்திக் செல்வா****************

Thursday, December 2, 2010

Anbindri~~~அன்பின்றி....


அன்பின்றி.. 
சுட்டாலும் சூரியனை சுற்றுமா பூமி? 
விட்டாலும் நம்மை வீரட்டுமா காற்று? 
அன்பின்றி.. 
உறவோடு இருந்து அறவோடு வெட்டினாலும் 
நமை பார்த்து சிரிக்குமா ரோஜா?? 
தன் பாதையில் விரட்டி சென்றாலும் 
கதிரவன் கரைந்ததும் சுருங்குமா தாமரை?? 
அன்பின்றி.. 
கொட்டினாலும் ஓட்டினாலும் மார்கழி வந்ததும் 
துள்ளலோடு நமை ஆரவணைக்குமா மேகம்?? 
'போ'என்று வசைபாடி அனுப்பினாலும் இசைபாடி 
கரையை தொட்டுத்தொட்டு பார்க்குமா கடல்?? 
அன்பின்றி.. 
நெல் உதிர்ந்ததும் உயிர்விடுமா கதிர்?? 
தோற்றாலும் நம்மை தொடருமா நட்பு?? 
கோபத்தோடு குடைபிடித்தாலும் முத்தம்இடுமா மழை?? 
அன்பே.. 
அன்பின்றி.. 
நீ மறைத்தாலும் மறையுமா உன் நாணம்?? 
கோடி வாசங்களில் உன்வாசம் முகரமட்டும் 
சுவாசிக்குமா இந்த உயிர்?? 
 
 
:) கார்த்திக் செல்வா :) 

Friday, November 26, 2010

kaliyuga kaadhalgal~~கலியுகக் காதல்கள்!!





காலம் கண்ட காகிதம் காத்த 
காவியக் காதல் பார்த்த பாரதத்தில் 
இன்றோ... 
 
கண் கதை சொல்லும் வேளை 
கண்ணால் பார்க்காத கணினிக் காதல்!! 
 
கனவுகள் செத்து கவலைகள் கொண்டு 
கண்ணியம் இல்லா கன்னிக் காதல் !! 
 
மெய் பார்க்கும் பொய்க் காதல்!! 
 
cafeஇல் பூக்கும் costly காதல்!! 
 
கர்வம் கொண்ட கௌரவக் காதல்!! 
 
'கால்'களில் வாழும் கைப்பேசிக் காதல்!! 
 
தீர்கம் இல்ல திடீர் காதல்!! 
 
நேற்று இன்று நாளை என்று 
நிலைத்து நிற்கும் தினமொரு காதல்!! 
 
பட்டம் பெற்றத்தொடு பட்டமாக பறந்துவிடும் 
தெளிவில் பிறந்த தெய்வீகக் காதல்!! 
 
கிடைத்தால் போதும்! கனவே போதும்! 
நானும் காதலிக்கிறேன்!! கடமைக் காதல்!! 
 
வெயில் சுட்டாலும் மழை தொட்டலும் 
கடற்கரை மணலில் கவலையில்லா காதல்!! 
 
இன்று இந்த காதல்கள் மணக்கின்றன !! 
'''''' இந்த காதலர்கள் மணப்பதில்லை!!!!!!'''''' 
 
 
 
:) ~கார்த்திக் செல்வா~ :)